கணவரின் படுக்கைக்கு இளம் பெண்களை அனுப்புகிறேனா? சந்தியா இதை நிரூபிக்க முடியுமா? ஜீவிதா ஆவேசம்...
கணவரின் படுக்கைக்கு இளம் பெண்களை அனுப்புவதாக சமூக ஆர்வலரின் குற்றச்சாட்டுக்கு நடிகை ஜீவிதா, இதில் உண்மை இல்லை என்றும் சந்தியா புகாரை
நிரூபிக்க முடியுமா? என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளை பிரபலங்கள் படுக்கைக்கு அழைக்கும் அவலத்தை நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து அம்பலப்படுத்தி
வருகிறார். இந்த நிலையில் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் திரையுலகம் குறித்து விவாத நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இந்த நிகழ்ச்சியில்
சமூக ஆர்வலர் சந்தியா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, நடிகை ஜீவிதா தனது கணவர் டாக்டர் ராஜசேகரின் இச்சையைத் தீர்த்து வைக்க பல பெண்களை அவரது படுக்கைக்கு அனுப்பி வைக்கிறார் என்று
கூறினார். சந்தியா கூறியதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். விடுதிகளில் தங்கியுள்ள இளம் பெண்களை குறி வைத்து அவர்களை தனது கணவரின்
படுக்கையை பகிர வைத்துள்ளார் என்று ஜீவிதா மீதா புகார் தெரிவித்தார். ஜீவி பெண்களை வெறும் போதைப் பொருளாக மட்டுமே பார்ப்பவர் என்றும் சந்தியா
கூறினார். சந்தியாவின் இந்த புகார், திரையுலக பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த நிலையில், சமூக ஆர்வலர் சந்தியாவின் குற்றச்சாட்டுக்கு நடிகை ஜீவிதா விளக்கம் அளித்துள்ளார். சந்தியா கூறியதில் எதுவும் உண்மை இல்லை. சந்தியா
தனது புகாரை நிரூபிக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் கூறியுள்ளார். சந்தியா மற்றும் அந்த விவாத நிகழ்ச்சியை நடத்திய டிவி சேனல் மீது அவதூறு வழக்கு
தொடரப் போகிறேன்.
திரையுலக பிரபலங்கள் என்றால் மிகவும் சீப்பானவர்கள் என்று சந்தியா நினைத்துக் கொண்டிருக்கிறாரா? யாரையும் கட்டாயப்படுத்தி படுக்கைக்கு அழைத்துச்
செல்ல அவர்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல. கதுவா சிறுமிக்கு நடந்தது என்னவென்று தெரியாத வயது. ஆனால் பிரபலங்கள் மீது புகார் கூறும் பெண்கள் 20
வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்களுக்கு விவரம் தெரியும்.
பல ஆண்டுகளாக அவரை ஏமாற்ற ஸ்ரீரெட்டி ஒன்றும் குழந்தை இல்லையே. அவருக்கு என்ன தேவை என்று தெரியவில்லை. பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட
ஸ்ரீரெட்டியின் இந்த வீடியோவைப் பாருங்கள் என்று செய்தியாளர்களிடம் காண்பித்தார் ஜீவிதா. இதனைத் தொடர்ந்து நடிகை ஜீவிதா, சந்தியா மற்றும் டிவி சேனல்
மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.