"கோர்ட்டில் அமிதாப் & சூப்பர் ஸ்டார்".. ஜோராக நடக்கும் வேட்டையன் ஷூட்டுங் - என்ன கதை? போட்டு உடைத்த பிரபலம்!
Vettaiyan : பிரபல இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் வேட்டையன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தின் நடித்து வருகின்றார்.
Jai Bhim
"ஜெய் பீம்" என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற இயக்குனராக மாறினார் டி.ஜே ஞானவேல். தற்பொழுது அவருடைய இயக்கத்தில் தமிழ் சினிமாவின் மூத்த முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் "வேட்டையன்" என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
Vettaiyan
பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரபல மூத்த நடிகர் அமிதாபச்சன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து இந்த வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. பல முன்னணி நடிகர், நடிகைகளும் இந்த திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இப்படத்தின் கதைகளம் குறித்த தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
Vettaiyan Shoot
இந்த திரைப்படத்தில் நடித்து வரும் பிரபல நடிகர் ராணா தகுபதி அளித்த தகவலின்படி, வேட்டையன் திரைப்படம் சட்டம், காவல்துறை மற்றும் தொழிலதிபர்கள் என்கின்ற மூன்று முக்கிய விஷயங்களை மையப்படுத்தி நடக்கும் சம்பவங்களின் கோர்வையாக இருக்கும் என்று கூறியுள்ளார். உண்மையில் இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இதுவரை ஏற்று நடத்திடாத ஒரு கதைக்களம் என்றும் கூறியுள்ளார்.
Ritika Singh
பிரபல நடிகை ரித்திகா சிங் வேட்டையின் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஏறத்தாழ 80 சதவீத படபிடிப்பு பணிகள் முடிந்து விட்ட நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்புகளை நோக்கி வேட்டையன் திரைப்படம் சென்று கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அமிதாபச்சன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் உரையாடுவது போன்ற ஒரு புதிய புகைப்படமும் வெளியாகியுள்ளது.