உங்கள் குழந்தை நல்ல மனிதராக வளர வேண்டுமா? பெற்றோர் கண்டிப்பாக கற்றுக்கொடுக்க வேண்டிய விஷயங்கள்..
தங்கள் குழந்தை நல்ல மனிதராக வளர பெற்றோர் கற்பிக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.:
குழந்தைகளின் வளர்ச்சியில் குழந்தை வளர்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களையும் சரியான அணுகுமுறையையும் சொல்லிக்கொடுப்பது முக்கியம். எல்லாப் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டியது அவசியம்,
அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த மனிதர்களாக மாற வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்னால் என்ன செய்கிறார்கள், சொல்கிறார்கள் அல்லது எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதையே குழந்தைகள் மாதிரியாக எடுத்துக் கொள்கின்றனர்.
குழந்தைகள் வளரும்போது அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள். குழந்தைகளுக்கு அடிப்படை வாழ்க்கைத் திறன்களைக் கற்பிப்பதில் தாய்மார்கள் எவ்வளவு முக்கியப் பங்காற்றுகிறாரோ, அதே அளவு ஒரு தந்தையும் தங்கள் குழந்தைகளுக்கு வெளி உலகில் அவர்களுக்கு உதவும் பாடங்களைக் கற்பிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறார். எனவே தந்தைகள் தங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டிய சில விஷயங்களைப் பார்ப்போம்:
மற்றவர்களை மதித்தல்: தந்தை தங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று மற்றவர்களை மதிக்க வேண்டும். பெற்றோர்கள் வீட்டில் ஒருவருக்கொருவர் மரியாதை உடன் நடத்தினால், குழந்தைகளும் தங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் மதிக்கத் தொடங்குவார்கள். வயது அல்லது பிற வேறுபாடுகள் இருந்தபோதிலும், அனைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்.
தவறுகளை ஏற்றுக்கொள்வது: தந்தைகள் தங்கள் குழந்தைகளுக்கு எப்போதும் தங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும். ஒரு தந்தை தன் தவறுகளை ஏற்றுக் கொள்ளாமல் பிடிவாதமாக இருந்தால், வீட்டில் வாக்குவாதத்தின் போது கோபத்தைக் காட்டினால், குழந்தைகளும் அந்த நடத்தையை முன்மாதிரியாகக் கொண்டு தற்காத்துக் கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வார்கள். தவறுகளை ஏற்றுக்கொள்வது அவர்களை பெரிய நபராக மாற்றும் என்பதை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்.
தோல்விக்கு பயப்பட வேண்டாம்: தோல்வியை தவறாகவோ அல்லது கெட்டதாகவோ கருத கூடாது என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பது மிகவும் முக்கியது. தோல்வி என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி தான் என்பதையும், தோல்வி என்பது வெற்றிக்கான முதல் படி என்பதையும் குழந்தைகளுக்கு சொல்ல கொடுக்க வேண்டும்.
தோற்பதால் எந்தத் தீங்கும் இல்லை என்பதை தந்தைகள் எப்போதும் தங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். அவர்கள் நிராகரிப்புகளை எதிர்கொள்ள தயங்கவோ அல்லது பயப்படவோ . கடின உழைப்பு மற்றும் தொடர்ச்சியான முயற்சியால் வெற்றியை அடையை முடியும் என்பதையும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.