ஏப்ரல் 19 வாக்குப்பதிவு நாளில் சினிமா காட்சிகள் ரத்து.. எங்கு? எப்போது தெரியுமா? முழு விபரம் இதோ..
சினிமா தியேட்டர் உரிமையாளர்களும் 19ஆம் தேதி சினிமா காட்சிகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். வாக்குப்பதிவு நாளுக்காக இந்த முடிவை எடுத்துள்ளனர்.
Cinema Shows Cancelled in Theatres
ஏப்ரல் 19 வாக்குப்பதிவு நாளுக்கான தேர்தல் விதிகளை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டார். மக்களவை தேர்தல், விளவங்கோடு இடைத்தேர்தல் காலை 7 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்வதால் அதன் பிறகு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
Cinema Shows Cancelled
நாளை மாலை 6 மணிக்கு மேல் எந்த வகையிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது. மேலும் வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்களுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதி நாளை மாலையுடன் முடிகிறது. நாளை மாலை 6 மணிக்கு மேல் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது. பிரச்சாரம் ஓய்ந்த உடன் நாளை மாலை 6 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும்.
Lok Sabha Election 2024
தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தவோ அதில் வேட்பாளர்கள் பங்கேற்கவோகூடாது. இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், திரையரங்குகள் வாயிலாக பரப்புரை செய்யக்கூடாது. வாக்குப்பதிவு நாளுக்கான விதிகளை மீறுவோருக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
No Morning Show in Theatres
தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1284 கோடி மதிப்புள்ள ரொக்கம், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பூவிருந்தவல்லியில் பிடிபட்ட 1425 கிலோ தங்கம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளனர். 100 சதவீத வாக்குப் பதிவை ஏற்படுத்தும் நோக்கில் அரசு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில் சினிமா தியேட்டர் உரிமையாளர்களும் 19ஆம் தேதி காலை, மதியம் காட்சிகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.
Tamil Nadu Theatres
மேலும் மாலை மற்றும் இரவு காட்சிகள் வழக்கம் போல் இருக்கும் என தெரிவித்துள்ளனர். தென் இந்திய திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் சார்பாக மக்கள் தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது, காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட மாலை மற்றும் இரவு நேரக் காட்சிகள் வழக்கமாக தொடரும் என்று திரையரங்க உரிமையளர் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.