யாரெல்லாம் கரும்பு சாறு குடிக்க கூடாது தெரியுமா..? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!
கரும்பு சாறு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், இது சிலருக்கு தீங்கு விளைவிக்கும். எந்தெந்த நபர்கள் கரும்புச்சாறு குடிக்க கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
கரும்பு சாறு இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு கோடை கால பானமாகும். உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் மற்றும் இதன் விலையும் மிகவும் மலிவானது. இதில் கார்போஹைட்ரேட், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
கோடையில், இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. மொத்தத்தில் இந்த சாறு குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும். ஆனால் பலருக்கு இது நன்மையாக இருந்தாலும், சிலருக்கு தீங்கு. எனவே, எந்தெந்த நபர்கள் கரும்புச்சாறு குடிக்க கூடாது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
சர்க்கரை நோயாளிகள் கரும்புச்சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும். காரணம், இதில கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளது. இதனால், நீரிழிவு நோயாளியின் உடலில் இரத்த சர்க்கரையை பாதிக்கப்படும். மேலும், இதில் அதிக அளவு இயற்கை சர்க்கரை சுக்ரோஸ் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் , நீரிழிவு நோயாளிகள் இதை குடித்தால், அவர்கள் பல சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
நீங்கள் ஏற்கனவே, உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருந்தாலும், அதில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால் கரும்பு சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில், இதில் அதிக கலோரிகள் உள்ளது. இந்த இரண்டு பொருட்களும் எடை அதிகரிப்புக்கு காரணமாக இருக்கும்.
உங்களுக்கு சீக்கிரம் சளி பிடித்தால் அல்லது சளி பிரச்சனை இருந்தால், கரும்பு சாறு குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் கரும்பு சாறு குளிர் தன்மை கொண்டது, இது குளிர்ச்சியை தூண்டும். இதனால் தொண்டை வலி, சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால் கரும்புச் சாற்றை குடிக்கவே வேண்டாம். ஏனெனில், அது பிரச்சனையை மேலும் மோசமாக்கும். உண்மையில், கரும்பு சாறு பெரும்பாலும் ரோட்டு வண்டிகளில் தான் விற்பனை செய்யப்படுகிறது. ஈக்கள் கூட உட்காரும். இது ஆரோக்கியமற்றது இதன் காரணமாக, வயிற்று வலி மற்றும் பிடிப்புகள் உணரப்படலாம்.