Kamalhaasan: கமல்ஹாசனின் தாய் மாமன் யார்? உடைந்து நின்ற தந்தைக்கு... கலங்கியபடி ஆறுதல் கூறிய ஸ்ருதிஹாசன்!
உலக நாயகன் கமல் ஹாசனின் தாய் மாமா அண்மையில் காலமான நிலையில்... கலங்கி நின்ற கமலுக்கு அவரின் மகள்கள் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோர் ஆறுதல் கூறியுள்ளனர்.
Kamalhaasan
குழந்தை நட்சத்திரமாக இருந்து, முன்னணி நடிகராக உயர்ந்தவர் கமல்ஹாசன். இவரின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் இவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் தான் இவரின் தாய் மாமனான சீனிவாசன்.
Kamalhaasan
சீனிவாசன் கமலஹாசனின் சொந்த ஊரான, பரமக்குடியில் பிறந்தவர். விமான படையில் வேலை செய்து ஓய்வு பெற்றார். கமல்ஹாசனின் குடும்பத்தில் அனைவருக்குமே இவர் மீது தனி மரியாதை உண்டு. இவரிடம் எந்த விஷயமாக இருந்தாலும், கலந்து ஆலோசித்த பின்னரே எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுப்பார்கள். அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.
சிறு வயதில் இருந்தே கமல்ஹாசனை வளர்த்த அவரது தாய்மாமன் சீனி வாசன்... அவரை கடந்த சில வருடங்களாக கொடைக்கானலில் தன்னுடைய பிள்ளைகளுடன் வசித்து வந்தார். கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு காரணமாக வரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்த இவர்... நேற்று முன்தினம், தன்னுடைய 92- ஆவது வயதில் உயிரிழந்தார்.
இது குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், அறிவித்து மிகவும் உருக்கமான பதிவு ஒன்றையும் போட்டிருந்தார். அந்த பதிவில் "எனது ஆளுமை உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்த மாமா சீனிவாசன் இன்று தன்னுடைய 92வது வயதில் கொடைக்கானலில் காலமானார். புரட்சிகரமான சிந்தனைகளுக்காகவும் துணிச்சலான செயல்களுக்காகவும் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு வீரயுக நாயகனாக திகழ்ந்தவர் அவர்" என்று கூறி இருந்தார்.
கமல்ஹாசனின் தாய்மாமன் சீனிவாசன் அவர்களின் உடல், கொடைக்கானலில் இருந்து சென்னைக்கு கொண்டுவரவப்பட்ட நிலையில், நேற்று காலை அவரின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அவரின் இறுதி சடங்கின் போது உலக நாயகன் குழந்தை போல் உடைந்து அழுத நிலையில்... அவர்க்கு ஸ்ருதி ஹாசன் ஆறுதல் கூறியுள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. கமல்ஹாசனின் குடும்பத்திற்கு ரசிகர்களும் தங்களின் ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.