Jyotika: ஜோதிகாவின் நடத்தை சரி இல்லை! ஓவராக பேசிய பயில்வான்... வெச்சு செய்யும் சூர்யா ரசிகர்கள்!
பிரபல சினிமா விமர்சகரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன்... ஜோதிகா பற்றி விமர்சித்து பேசியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Suriya Jyothika starrer new film updates out
கோலிவுட் திரையுலகின், நட்சத்திர ஜோடி என்றதுமே, அஜித் - ஷாலினிக்கு அடுத்தபடியாக அனைவரது நினைவுகளுக்கும் வருவது சூர்யா - ஜோதிகா தான். ஜோதிகா இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்றாலும், சூர்யா பல வருடங்கள் அவரை உருகி உருகி காதலித்து, பல பிரச்சனைகளை சமாளித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கரம் பிடித்தார்.
Jyothika and Suriya
ஜோதிகாவும் தன்னுடைய காதலுக்காக, சூர்யா குடும்பத்தினர் கூறியது போல்... திருமணத்திற்கு பின்னர் ஒட்டுமொத்தமாக திரையுலகில் இருந்து விலகி, குழந்தைகளை பெற்றுக்கொண்டு டிபிக்கல் குடும்ப தலைவியாகவே வாழ்ந்தார். பின்னர் தன்னுடைய பிள்ளைகள் பள்ளிக்கு சென்ற பின்னர், கணவர் சூர்யாவின் முழு சப்போர்டுடன், கணவரின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டேர்டைன்மெண்ட் தயாரித்த 36 வயதினிலே படத்தில் ஸ்டாங் கம் பேக் கொடுத்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றியை தமிழ் திரையுலகில் பதிவு செய்தது.
இந்த படத்திற்கு பின்னர், ஜாக்பார்ட், தம்பி, நாச்சியார், ராட்சஷி, என ஹீரோயின் சப்ஜெட் படங்களை மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடித்தார் ஜோ. அப்படி இவர் நடித்த படங்களும் முதலுக்கு மோசமின்றி வசூல் செய்தது.
Suriya
கடந்த ஆண்டு கணவர் மற்றும் குழந்தைகளுடன், மும்பையில் செட்டில் ஆன ஜோதிகா... தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்தது மட்டும் இன்று அடுத்தடுத்து பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கி உள்ளார். அந்த வகையில் சமீபத்தில் இவர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்த 'சைத்தான்' நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இரண்டு பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் தமிழகத்தில் நடந்த மக்களவை தேர்தலில், நடிகர் சூர்யா மட்டுமே மும்பையில் இருந்து வந்து தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். ஜோதிகா... நேபாளுக்கு டூர் சென்றிருப்பதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ஜோதிகா தன்னுடைய ஜனநாயக கடமையை செய்ய தவறிவிட்டதாக கூறி விமர்சனம் செய்ததை பார்க்க முடிந்தது.
தற்போது இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்... 'ஜோதிகா வாக்களிக்க வராதது குறித்து பத்திரிகையாளர்கள் பேச்சை எடுக்கும் போது, சிவகுமாரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? மகன் மட்டும் வந்து வாக்களிக்கிறார். ஆனால் மருமகள் வரவில்லை. இந்த விஷயத்தில் ஜோதிகாவின் நடத்தை சரியில்லை. மாமியார், மாமனாருக்கு அவர் அடங்கி இருக்க வேண்டும். கணவனும், மனைவியும் ஒன்றாக இருக்க வேண்டும். அதை எல்லாம் ஜோதிகா மறந்துவிட்டார்' என கூறியுள்ளார். பயில்வானின் இந்த பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நெட்டிசன்கள் மற்றும் சூர்யா ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகிறார்கள்.