Asianet News TamilAsianet News Tamil

போலீசை கழுவி ஊற்றிய பிரபல நடிகை நிலானி அதிரடி கைது...! குன்னூரில் தூக்கிய போலீஸ்...!

serial actress nilaani arrested in kunoor
serial actress nilaani arrested in kunoor
Author
First Published Jun 20, 2018, 6:42 PM IST


சின்னத்திரையில், பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நிலானி. இவர் தற்போது குன்னூரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்டெர்லைட் பிரச்சனை:

தூத்துகுடியில், ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வேண்டும் என்று, தூத்துக்குடியை சேர்ந்த மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர், 100 நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

serial actress nilaani arrested in kunoor

இவர்களுடைய போராட்டத்திற்கு, தமிழக அரசு, மற்றும் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காததால், அறவழி போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் ஒரு மாணவி உட்பட 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பிரபலங்கள் மட்டும் இன்றி பலர் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்தனர். அதே போல் பல அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர் விஜய், ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள், இந்த துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்தவர்களையும், இறந்தவர்கள் குடும்பத்தையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.

நடிகை நிலானி பேச்சு:serial actress nilaani arrested in kunoor

மேலும் இந்த துப்பாக்கி சூட்டிற்கு எதிராக, பிரபல சின்னத்திரை நடிகை, நிலானி போலீஸ் உடை அணிந்தபடி ஒரு வீடியோவை வெளியிட்டார். 

இந்த வீடியோவில் அவர்..." நம் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் வேதனை அளிக்கிறது என்றும், அமைதியான வழியில் போராடுகிறோம். நான் தற்போது சூட்டிங்கில் இருக்கிறேன், இல்லை என்றால் தூத்துகுடி சென்று போராட்டத்தில் பங்கேற்றிருப்பேன். இந்த காவலர் உடையை அணிந்திருப்பது தனக்கு உடல் கூசுகிறது என்று தெரிவித்தார். 

மேலும் இந்த போராட்டம் முடிய போவதில்லை, இனி தான் ஆரம்பம் என்றும், தமிழர்களை தீவிரவாதிகள் போல் சுட்டுக்கொள்ள பார்க்கிறார்கள் என்று இவர் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.serial actress nilaani arrested in kunoor

இவர் போலீஸ் உடையில் இதுபோன்ற, அவதூறு கருத்து பரப்பியதாக ஒருவர், வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் இவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு குறித்து  விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் இன்று, குன்னூரில் வைத்து சின்னத்திரை நடிகை நிலானியை கைது செய்தனர். இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுதியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios