Asianet News TamilAsianet News Tamil

காஷ்மீர் பிரச்னையில் கண் வைத்திருந்த பாகிஸ்தானின் பிடறியில் அடித்த பிரச்னை... ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

காஷ்மீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாகிஸ்தானியர்கள் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை காஷ்மீர் அல்ல. பணவீக்கம் தான் என சர்வே முடிவில் தெரிய வந்துள்ளது. 
 

The Pakistan problem that kept an eye on the Kashmir issue
Author
Pakistan, First Published Nov 1, 2019, 6:15 PM IST

கேலப் இன்டர்நேஷனல் அசோசியேஷன் என்ற சுவிட்சர்லாந்தை சேர்ந்த அமைப்பும், கிலானி பாகிஸ்தான் என்ற அமைப்பும் இணைந்து  பாகிஸ்தானின் 4 மாகாணங்களில் அந்த நாட்டு மக்களின் முக்கிய பிரச்சினை என்ன என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தியது .The Pakistan problem that kept an eye on the Kashmir issue

பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் சிந்து ஆகிய நான்கு மாகாணங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் இந்த் சர்வேயில் பங்கேற்று உள்ளனர். இந்த ஆய்வில், பதிலளித்தவர்களில் 53 சதவீதம் பேர் நாட்டின் பொருளாதாரம், குறிப்பாக பணவீக்கத்தை அதிகரிப்பது நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதாக  கூறி உள்ளனர்.

பணவீக்கத்தையடுத்து வேலையின்மை 23 சதவீதம், ஊழல் 4 சதவீதம், மற்றும் நீர் நெருக்கடி 4சதவீதம் ஆகியவற்றை  மிகப்பெரிய பிரச்சினையாக கூறி உள்ளனர்.  காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசமயமாக்க பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையாக முயன்று வரும் நிலையில், ஆய்வு நடத்தப்பட்டவர்களில்  8 சதவீதம் பேர் மட்டுமே காஷ்மீர்  விவகாரம் குறித்து தங்கள் கவலையை தெரிவித்தனர். அரசியல் ஸ்திரமின்மை, மின் பற்றாக்குறை, டெங்கு  காய்ச்சல்  போன்ற பிரச்சினைகள் குறித்தும் இந்த மக்கள் கூறி உள்ளனர்.The Pakistan problem that kept an eye on the Kashmir issue

42 சதவிகித பாகிஸ்தானியர்கள் வறுமைக்கும்  5 சதவீத மக்கள்  மாநில கல்விக்கும் பாகிஸ்தானுக்கு அதிக முன்னுரிமை அளிக்கவேண்டும் என கருதுகின்றனர். பாகிஸ்தானின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக நெருக்கடியில் உள்ளது. பலவீனமான மற்றும் சமநிலையற்ற வளர்ச்சியின் காரணமாக பாகிஸ்தான் குறிப்பிடத்தக்க பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

The Pakistan problem that kept an eye on the Kashmir issue

பாகிஸ்தான் பொருளாதாரம் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. அங்கு ஒரு லட்சிய மற்றும் தைரியமான சீர்திருத்தங்கள் தேவைப்படும்  என்றும் ஜூலை மாதம் சர்வதேச நாணய நிதியம் உள்ளது. அந்த நேரத்தில், பாகிஸ்தானில் 8 பில்லியன் டாலருக்கும் குறைவான நாணய இருப்பு இருந்தது, இது 1.7 மாத இறக்குமதியை ஈடுகட்ட போதுமானது. சர்வதேச நாணய நிதியத்தைத் தவிர, கத்தார், சீனா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிடமிருந்து பாகிஸ்தான் கணிசமான கடன்களை பெற்று உள்ளது.


 

Follow Us:
Download App:
  • android
  • ios