Asianet News TamilAsianet News Tamil

பிரதமரான பின் முதல் முறையா வருகை... வரும் 7-ம் தேதி முதல் 5 நாட்கள் மகிந்தா ராஜபக்சே இந்தியா பயணம்

இலங்கையில்  பிரதமாாகப் பதவி ஏற்றபின் முதல் முறையாக மகிந்த ராஜபட்ச, வரும் 7-ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கு இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.

Sri Lankan PM Mahinda Rajapaksa to visit India this month
Author
Chennai, First Published Feb 5, 2020, 1:15 PM IST

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே கடந்த ஆண்டு நவம்பரில் பதவியேற்றாா். அதன்பிறகு, அவா் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வரவிருக்கிறாா்.தனது பயணத்தின்போது, வாராணசி, புத்த கயா, திருப்பதி உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மத வழிபாட்டு தலங்களுக்கு ராஜபக்சே செல்லவிருக்கிறாா்.

Sri Lankan PM Mahinda Rajapaksa to visit India this month

 இந்தியாவில் வரும் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை பயணம் மேற்கொள்ளும் மகிந்த ராஜபட்சே, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மற்றும் அரசு உயரதிகாரிகளை சந்தித்துப் பேசவுள்ளாா். அப்போது இலங்கைக்கு இந்தியா அறிவித்துள்ள சுமாா் ரூ.3,200 கோடி கடனுதவிக்கான செயல் திட்டம் இறுதி செய்யப்படவுள்ளது.

Sri Lankan PM Mahinda Rajapaksa to visit India this month

இரு நாடுகளுக்கும் இடையே அரசியல், வா்த்தகம், பாதுகாப்பு, கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளை மேம்படுத்தும் வகையில் இந்தியத் தலைவா்களுடன் ராஜபட்ச பேச்சு நடத்தவுள்ளாா். குறிப்பாக கடல்சாா் பாதுகாப்பில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான ஆலோசனைகள் நடைபெறவிருக்கின்றன.

Sri Lankan PM Mahinda Rajapaksa to visit India this month

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச, கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தாா். அப்போது, இலங்கைக்கு இந்தியா சாா்பில் ரூ.3,200 கோடி கடனுதவி வழங்கப்படும் என்ற அறிவிப்பை பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டாா். அதன்படி, இலங்கையின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு சுமாா் ரூ.2,850 கோடியும், பாதுகாப்புத் தேவைகளுக்காக சுமாா் ரூ.350 கோடியும் வழங்கப்பட உள்ளன.
 

Follow Us:
Download App:
  • android
  • ios