அதிரடியாக பிரதமர் பதவி ராஜினாமா...!! அதிர்ச்சியில் உலக நாடுகள்...!!
எனவே இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் பிரதமர் மகாதீர் தனது ராஜினாமா கடிதத்தை மலேசியா மன்னரிடம் வழங்கியுள்ளார் , இது குறித்து மலேசிய அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் . அவர் தனது இராஜினாமா கடிதத்தை இன்று மலேசிய அரசிடம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன . மகாதீர் முகமது கடந்த 1981 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரையில் மலேசிய பிரதமராக பதவி வகித்தவர் ஆவார் பின்னர் மீண்டும் 2018ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் பதவியை பிடித்தார் .
91 வயதாகும் மகாதீர் கடந்த 2018-ஆம் ஆண்டில் பதவி ஏற்றதில் இருந்து தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் விரோதத்தை சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் புதிய கூட்டணிகளை உருவாக்கி நிலையான ஆட்சியை கொடுக்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது . எனவே இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் பிரதமர் மகாதீர் தனது ராஜினாமா கடிதத்தை மலேசியா மன்னரிடம் வழங்கியுள்ளார் , இது குறித்து மலேசிய அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
ஆளும் கட்சிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அவர் திட்டமிட்டுள்ளார் என உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன , இந்நிலையில் பிரதமர் மகாதீர ராஜினாமா கடிதத்தை மலேசிய அரசர் ஏற்றுக்கொள்வாரா இல்லை என்ற தகவல் வெளியாகவில்லை , சமீபத்தில் காஷ்மீர் விவகாரத்தில் கருத்து கூறி இந்தியாவின் கண்டனத்தை பெற்றார் மகாதீர் என்பது குறிப்பிடதக்கது.