அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை... அதிர்ச்சியில் கதறும் பெற்றோர்..!
இந்திய மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே உள்ள குவேம்புநகரை சேர்ந்தவர் அபிஷேக் சுதேஷ்பட் (25). மைசூரில் என்ஜினீயரிங் படித்து முடித்த இவர் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு கலிபோர்னியாவின் கான்பெர்னாக்பிகோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். பார்ட் டைம் ஜாப்பாக அங்குள்ள உணவு விடுதி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் அபிஷேக்கை சுட்டுதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக மைசூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சி ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே அபிஷேக்கின் சகோதரரும், உடலை பெறுவதற்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார். மேலும், அவரது உடலை இந்திய கொண்டு வர மத்திய அரசிடம் உதவி கோரியுள்ளனர். இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.