Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவை வென்ற போரிஸ் ஜான்சன்..!! சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட இங்கிலாந்து பிரதமர்..!!

இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து மூன்று நாட்களாக வழங்கி வந்த சிகிச்சையில் பலனாக அவர் குணமடைந்து சாதாரன வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் 

British prime minister Boris Johnson require from  corona virus and he transfer to ordinary ward from icu
Author
Delhi, First Published Apr 10, 2020, 3:56 PM IST

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அத்துடன் அவர் வேகமாக குணமடைந்து வருவதாகவும் இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது ,  அந்த வைரஸ் இங்கிலாந்தையும் விட்டுவைக்கவில்லை ,  

ஏழை பணக்காரன் என வேறுபாடின்றி வாய்ப்பு கிடைப்பவர்களை எல்லாம் தனது கொடூர வலைக்குள் வீழ்த்தும் கொரோனாவுக்கு உலக அளவில் பல அரசியல் தலைகளும் ஆளாகி  வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் வைரசால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சிகிச்சைகள் இன்றி  எளிதாக வைரசிலிருந்து மீண்டார், இந்நிலையில்  இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

British prime minister Boris Johnson require from  corona virus and he transfer to ordinary ward from icu

அதாவது,  கடந்த 15 நாடுகளுக்கு முன்னர் ,  திடீரென தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதாக அறிவித்த போரஸ் ஜான்சன். டாவுனிங் வீதியில் உள்ள அரசு இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்,   10 தினங்களுக்கும் மேலாக தனிமையில் இருந்த அவர் . வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கினார் அதில்,  இங்கிலாந்து மக்கள் அரசு சொல்லும் கட்டுப்பாடுகளை பின்பற்றி கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் , இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இருந்து நாம் விரைவில் விடுபடுவோம் ,

அரசின் திட்டங்களுக்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறிய அவர், அப்போது தனது உடல்நிலை குறித்து தெரிவித்திருந்தார், அதாவது,  தனக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்படுகிறது ஆனாலும் விரைவில் இதிலிருந்து  குணமடைந்து உங்களை சந்திப்பேன் என கூறினார். இந்நிலையில் திடீரென அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ,  மருத்துவர்களின் அறிவுரைப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்தது,  

British prime minister Boris Johnson require from  corona virus and he transfer to ordinary ward from icu

இந்நிலையில் அவர் கடுமையான மூச்சு திணறலுக்கு ஆளாகி இருப்பதாகவும்,  அவசர சிகிச்சைப் பிரிவில்  வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசிப்பதாகவும் தகவல்கள் பரவியது.  அது ஒட்டுமொத்த இங்கிலாந்து மக்களையும் கலங்க வைத்தது,  உலக நாடுகளின் தலைவர்கள் பதறியடித்து போரிஸ் ஜான்சன் உடல் நலக் குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர்,  இந்நிலையில் நேற்று  இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு  கொரோனா அறிகுறி மோசமடைந்ததால்  தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார் என்பது உண்மைதான் ,  ஆனால் அவர் நல்ல மன உறுதியுடன் உள்ளார் ,  இயல்பாக சுவாசிக்கிறார் ,

British prime minister Boris Johnson require from  corona virus and he transfer to ordinary ward from icu 

அவரது உடல்நிலை சீராக இருக்கிறது என்றும்,  அவர் விரைவில் மீண்டு வருவார் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தது , இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து மூன்று நாட்களாக வழங்கி வந்த சிகிச்சையில் பலனாக அவர் குணமடைந்து சாதாரன வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் என பிரமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது,  அவர் வேகமாக குணமடைந்து வருவதாகவும் அதில் தெரிவித்துள்ளது. இதையடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரிட்டிஷ் எதிர்கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  

 

Follow Us:
Download App:
  • android
  • ios