Asianet News TamilAsianet News Tamil

உழைத்து சம்பாதித்த சொத்தை மக்களுக்காக வழங்கிய தொழிலதிபர்..!! துபாயை நெகிழவைத்த இந்தியர்...!!

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அவர்,   கடந்த 25 ஆண்டுகளாக துபாய் மண்ணில் வாழ்ந்து வருகிறேன் .  தற்போது கொரோனா  வைரஸ் காரணமாக துபாய் பொலிவிழந்து வருகிறது . 
 

a Dubai living Indian gave his hole property for Dubai peoples for corona treatment
Author
Delhi, First Published Mar 30, 2020, 6:41 PM IST


சுமார் 25 ஆண்டு காலமாக உழைத்து சம்பாதித்த பல நூறு கோடி மதிப்புள்ள சொத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துபாய் வாழ் மக்களுக்கு இந்திய தொழிலதிபர் ஒருவர் இனமாக வழங்கியுள்ளார் .  அவரின் இந்த செயல் துபாய் மக்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது .  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது .  அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா என அனைத்து கண்டங்களிலும் பரவி மனிதப் பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது இந்த வைரஸ் இந்நிலையில்  சர்வதேச நாடுகள் இந்த வைரசில் இருந்து தப்பிக்க கடுமையாக போராடி வருகின்றனர் . வைரசால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  சிகிச்சை அளிக்க மிகுந்த பொருளாதார தேவை அந்தந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது . 

a Dubai living Indian gave his hole property for Dubai peoples for corona treatment

 இந்நிலையில் இந்த வைரஸ் அரபு நாடுகளையும் கடுமையாக பாதித்துள்ள நிலையில்,  அந்தந்த நாட்டில் வசிக்கும் தொழிலதிபர்கள் செல்வந்தர்கள் தங்களால் முடிந்த உதவிகளை அந்நாட்டு மக்களுக்கு செய்து வருவதுடன்,  அரசுக்கும் பொருளாதார உதவி வழங்கி வருகின்றனர் .  இந்நிலையில் துபாயை சேர்ந்த இந்திய தொழிலதிபர் அஜய் சோப்ரா என்பவர் துபையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருத்துவமனை அமைக்க தனது சொத்தை அந்நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார் .  கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் துபாயில் நகைக்கடை நடத்தி வருகிறார்.  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அவர்,   கடந்த 25 ஆண்டுகளாக துபாய் மண்ணில் வாழ்ந்து வருகிறேன் .  தற்போது கொரோனா  வைரஸ் காரணமாக துபாய் பொலிவிழந்து வருகிறது . 

a Dubai living Indian gave his hole property for Dubai peoples for corona treatment

 துபாய் மீண்டும் அதே பழைய பொலிவைப் பெற வேண்டும் என்பதற்காக ஜூமேய்ரா லேக் டவர் எனப்படும் தனக்கு சொந்தமான மிகப்பெரிய கட்டிடத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக மாற்றிக்கொள்ள வழங்குகிறேன் என தெரிவித்துள்ளார் .  இந்த கட்டடம் 77 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது அதில் சுமார் 400 பேருக்கு மேல் சிகிச்சை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது .  துபாய்க்கு வந்து சேர்த்த சொத்தை துபாய்  மக்களை பாதுகாக்க உதவியாக இருக்கும் என்பதனால் அரசுக்கு இந்த உதவி செய்ய கடமைப்பட்டிருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார் .  துபாயில் இதுவரை 570 பேருக்கு  வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடான் இதுவரை அந்த வைரசுக்கு அங்கு 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது .
 

Follow Us:
Download App:
  • android
  • ios