படுக்கையறையில் அந்த விஷயத்தில் தொல்லை கொடுத்த சிறுவன்...!! அடித்துக் கொன்ற தாய் , தந்தை..!!
சிறுவனது உடலை வீட்டிலிருந்து வெளியே கொண்டு சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் புதைத்து விட்டதாக தெரிகிறது .
படுக்கையில் சிறுநீர் கழித்த ஐந்து வயது சிறுவனை அவனது பெற்றோர்களை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூ ப்ரூயண்ட், ஜோயன் குன்னிங்கம் தம்பதியர் , இவர்களுக்கு ஏஜே ஆண்ட்ரூ என்ற 5 வயது மகன் இருந்தான், அடிக்கடி சிறுவன் படுக்கையில் சிறுநீர் கழிப்பது வழக்காம இருந்துள்ளது .
சம்பவத்தன்றும் வழக்கம் போல சிறுவன் தான் உடுத்தியிருந்த உடையிலேயே சிறுநீர் கழித்துள்ளான், இதனால் ஆத்திரமடைந்த தாய் ஜோயன் சிறுவனை பலமாக தாக்கியுள்ளார் . அதில் வலி தாங்க முடியாமல் சிறுவன் துடித்து கதறினான், பின்னர் அவனது தந்தை வந்தவுடன் அவரிடம் தன் தாய் தாக்கியது குறித்து புகார் தெரிவித்தான், ஆனால் தந்தை சிறுவன் சிறு நீர் கழித்ததற்காக கோபமடைந்து சிறுவனை அவரது பங்குக்கும் சரமாரியாக தாக்கியுள்ளார் .
இதில் பலத்த காயமடைந்த சிறுவன் , சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் . இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியர் யாருக்கும் தெரியாமல் சிறுவனது உடலை வீட்டிலிருந்து வெளியே கொண்டு சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் புதைத்து விட்டதாக தெரிகிறது . பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சிறுவனின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் விசாரணையில் சிறுவனின் தாய் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது , சிறுவனை கொலை செய்த குற்றத்திற்காக ஜோயனுக்கு 20 முதல் 60 ஆண்டுகளை வரை சிறைத்தண்டனை வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்நிலையில் அடுத்தமாதம் தந்தை ஆண்ட்ரூக்கு நீதிமன்றம் தண்டனை வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது .