ஆக்ஸியம் ஸ்பேஸ் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட தனியார் விண்வெளிப் பயணம் தான் ஆக்ஸியம்-4 மிஷன் (Ax-4) ஆகும்.
இந்தியா, போலந்து, ஹங்கேரியைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஒரு குழுவை அனுப்புவதே இதன் நோக்கம்.
சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) பூமியை சுற்றி செயற்கைக்கோள் இயங்கும் பெரிய விண்வெளி ஆய்வு மையமாகும்.
ஆக்ஸியம்-4 மிஷனுக்கு இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா அனுப்பப்படுகிறார். இவர் தான் ஐ. எஸ். எஸ் பார்வையிடும் முதல் இந்திய விண்வெளி வீரர் ஆவார்.
விண்வெளிக்கு செல்வதால் அதற்கென தனி உயரப் பயிற்சிகளில் சுக்லா கவனம் செலுத்துகிறார். அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளார்.
விண்வெளியின் குறைந்த அழுத்த நிலையை பிரதிபலிக்கும் வளிமண்டல அறையில் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அழுத்த மாற்றங்கள், குறைந்த ஆக்ஸிஜன் அளவுகள் உள்ளிடவற்றை கையாளும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
அறிவாற்றல், உடல் செயல்பாடுகளை பாதிக்கும் ஹைபோக்ஸியா- ஆக்ஸிஜன் குறைபாடு உள்ளிட்ட ஆபத்துகள் குறித்து விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
விண்வெளியில் எதிர்பாராத சவால்களை சமாளித்து முடிவெடுக்கும் வகையில் விண்வெளி வீரர்களுக்கு அவசரகால நெறிமுறைகள் பயிற்சி அளிக்கப்பட்டன.
விண்வெளி வீரர்களுக்கு உயரத்தால் ஏற்படும் அழுத்தங்களால் என்னென்ன மாறுதல்கள் ஏற்படும் என கண்டறியும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டன.