பூரியும் கிழங்கு மசாலாவும் ஒரு பிரிக்க முடியாத காம்போ. ஆனால் பலர் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்கிறார்கள். அதனால் பூரியையும் தவிர்த்து விடுகிறார்கள்.
இந்த முறையில், பூரியை எண்ணெய்க்குப் பதிலாகத் தண்ணீரில் வேகவைக்க வேண்டும். எண்ணெய் இல்லாமல் பூரி செய்ய, உங்கள் வீட்டில் ஒரு ஏர் பிரையர் தேவைப்படும்.
முதலில் மாவு பிசைந்து கொள்ளுங்கள். மாவில் சிறிது உப்பு மற்றும் இரண்டு டீஸ்பூன் தயிர் சேர்க்கவும். மாவு பிசைந்த பிறகு, சிறிய உருண்டைகளாகப் பிரித்து பூரி போல தேய்த்துக் கொள்ளுங்கள்.
தேய்த்து வைத்த பூரிகளை ஒவ்வொன்றாகத் கொதிக்கும் தண்ணீரில் போடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், பூரிகள் மேலே மிதக்க ஆரம்பிக்கும். சிறிது நேரம் கழித்து அவற்றை வெளியே எடுக்கவும்.
பின்னர் கொதிக்கும் தண்ணீர் உள்ள பாத்திரத்தின் மீது இட்லி தட்டை வைக்கவும். அதன் மேல் பூரிகளை வைத்து மூடி போட்டு மூடவும். 2 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து, பின்னர் எடுத்துவிடவும்.
இப்போது, ஏர் பிரையரைப் பயன்படுத்தும் நேரம். ஏர் பிரையரை 180 டிகிரியில் ப்ரீ-ஹீட் செய்யவும். பிறகு, வேகவைத்த பூரிகளை ஏர் பிரையரில் சமைக்கவும். பூரி உப்பி வரும்