சனிக்கிழமை இரவு நடைபெற்ற 69வது ஷோபா பிலிம்பேர் விருது தென் 2024 விழாவில் மலையாள சூப்பர் ஸ்டாருக்கு அவரது 15வது பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.
Tamil
சிறந்த நடிகருக்கான விருது
ஹைதராபாத்தில் நடைபெற்ற பிலிம்பேர் விருது 2024 விழாவில், மம்முட்டிக்கு அவரது மலையாள படம் 'நண்பகல் நேரத்து மயக்கம்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
Tamil
விருது பெற்ற தருணம் வருத்தமளிக்கிறது
'இந்த தருணம் உண்மையில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், ஆனால் வயநாடு நிலச்சரிவால் எனது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அது எனக்கு வருத்தமாக இருக்கிறது' என்று கூறினார்.
Tamil
நன்றி தெரிவித்த மம்முட்டி
'இது எனது 15வது பிலிம்பேர் விருது. நான் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறேன், அதில் நான் மலையாளத்துடன் தமிழிலும் பேசியிருக்கிறேன். இதற்காக எனது குழுவினருக்கு நன்றி' என்றார்.
Tamil
மிகவும் மகிழ்ச்சியாக இல்லை
'இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருக்க வேண்டும். ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை. வயநாட்டில் துன்பத்தில் இருக்கும், உயிரிழந்தவர்களுக்காக நான் வருத்தப்படுகிறேன்' என்றார்.
Tamil
உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்
தனது உரையில் மம்முட்டி மேலும் கூறுகையில், 'நீங்கள் அவர்களை (வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள்) ஆதரித்து, அவர்கள் மீண்டும் வாழ உதவ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்' என்றார்.
Tamil
என்ன சொல்லுது படம்?
'நண்பகல் நேரத்து மயக்கம்' ஜனவரி 2023 இல் வெளியானது. தமிழ்நாட்டின் புனிதத் தலத்திற்குச் சென்ற பிறகு தமிழரைப் போல நடந்து கொள்ளும் ஒரு மலையாளியின் கதையை இந்தப் படம் சொல்கிறது.