பிச்சைக்காரன் வேஷம் போட்டு தாயின் பிறந்த நாளுக்கு மகன் கொடுத்த சர்ப்ரைஸ்!! வைரலாகும் வீடியோ...
பிச்சைக்காரன் வேஷம் போட்டு தாயின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மகனை கண்டுபிடிக்காத குடும்ப உறுப்பினர்களுக்கு இறுதியாக காத்திருந்த பேரதிர்ச்சி காத்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கேரளாவில், மகன் ஒருவர் தன் தாய்க்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக பிச்சைக்கார் வேடமணிந்து, தாயிடம் சென்று பிச்சை எடுத்துள்ளார். அன்றைய தினம் தாயின் பிறந்தநாள் என்பதால், இப்படியொரு திட்டத்தை அந்த மகன் வகுத்திருந்தார். பிச்சைக்காரர் வேடத்தில் தாயிடம் எவ்வளவு கெஞ்சியும், அவர் உணவு வழங்கவில்லை.
பிச்சைக்கேட்டவர் யார் என்பது பின்னர் புரிந்து கொள்கிறார். ஆனாலும் பிச்சையெடுப்பருக்கு, அந்த தாய் உணவு வழங்காதது குறித்து நெட்டிசன்கள் பலவாறு கருத்து கூறி வருகின்றனர். பிச்சையெடுக்கும் நபர் தாய்மொழியான மலையாள மொழியை பேசுவதை விடுத்து, தமிழ் பேசுகிறார். அவரது இந்த தமிழ் பேச்சுக்கும் கடுமையான கண்டனங்களை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.