Asianet News TamilAsianet News Tamil

நடுரோட்டில் சண்டைப் போட்ட பெண்கள்! கைக் குழந்தையின் நிலைமையை இந்த வீடியோவில் பாருங்க!

பெண்கள் சண்டை போட்டுக்கொள்ளும் போது அதை குழாயடி சண்டை என்று சிலர் கேலியாக கூறுவார்கள். இது உள்ளூரில் தான் பிரபலம் என நினைக்க வேண்டாம். இந்த மாதிரி சண்டை எல்லாம் உலகம் முழுவதும் சகஜமப்பா! என கூறும்படியான ஒரு சம்பவம் ஒன்று சமீபத்தில் நடைபெற்றிருக்கிறது.   

பெண்கள் சண்டை போட்டுக்கொள்ளும் போது அதை குழாயடி சண்டை என்று சிலர் கேலியாக கூறுவார்கள். இது உள்ளூரில் தான் பிரபலம் என நினைக்க வேண்டாம். இந்த மாதிரி சண்டை எல்லாம் உலகம் முழுவதும் சகஜமப்பா! என கூறும்படியான ஒரு சம்பவம் ஒன்று சமீபத்தில் நடைபெற்றிருக்கிறது.   

அப்படி ஒரு அடி தடி சண்டை நடைபெற்றது சவுதியில், அதுவும் ரோட்டில் வைத்து.
சாலையில் பயணம் செய்து கொண்டிருந்த போது ,ஒருவரின் கார் மீது இன்னொருவரின் கார் லேசாக உரசி இருக்கிறது. இதனால் அந்த கார்களில் பயணம் செய்த பெண்கள் சாலையில் இறங்கி ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு மிகவும் மோசமாக சண்டி இட்டிருக்கின்றனர்.

இந்த அடி தடி சண்டையின் போது ஒரு பெண்ணின் கையில் குழந்தை இருந்திருக்கிறது. அந்த சின்ன குழந்தையை சண்டை போடும் வேகத்தில் இன்னொரு பெண் தள்ளிவிடுகிறார். ஒவ்வொரு முறையும் அந்த குழந்தைக்கு சொந்தக்கார பெண் குழந்தையை எடுக்கும் போதும் இது நடக்கிறது. 

ஏதோ பொம்மை போல மீண்டும் மீண்டும் கீழே விழும் குழந்தையை பார்க்கும் மக்களுக்கோ மனம் பதறுகிறது.
ஆனால் அந்த 5 பெண்களோ முழுமூச்சாக சண்டை போட்டு கொண்டிருக்கின்றனர். இதனால் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. ஒரு சின்ன விஷயத்துக்காக குழந்தை என்றும் இரக்கப்படாமல் அவர்கள் போட்டுக்கொள்ளும் இந்த சண்டை கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
 

Video Top Stories