எங்க சிங்கம் இங்க தான் கெத்தா உட்கார்ந்திருக்கு! முடிஞ்சா தொடு... ஹெச் ராஜா ஆதரவாளர் வீடியோ!
ஹெச்.ராஜா, தலைமறைவாகவில்லை என்றும், அவர் இங்குதான் உள்ளார் என்றும் எங்களைத் தாண்டிதான் அவரை கைது செய்ய முடியும் என்று அவரது ஆதரவாளர் பேசியுள்ளது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே மெய்யாபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் இந்த ஊர்வலம் நடைபெற்றது. அப்போது குறிப்பிட்ட பகுதிக்கு தடை விதித்திருப்பதாக ஊர்வலத்துக்கு போலீசார் தடை விதித்தனர். போலீசாரின் தடையை மீறி ஊர்வலமும் நடைபெற்றது.
அப்போது, ஹெச்.ராஜா போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் கூறி வருகின்றனர். உயர்நீதிமன்றத்தை அவமதித்ததால், ஹெச்.ராஜா மீது 8 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய இந்துமுன்னணி மாவட்ட அமைப்பாளர் வினோத், எங்க சிங்கம் இங்க உட்கார்ந்திருக்குடா..உங்க கண்ணுக்கு தெரியுதா? இந்த முன்னணியின் ஒரே குரல் எங்கள் ஹெச்.ராஜாஜி... இங்க சிங்கம் மாதிரி உட்கார்ந்திருக்கு... எங்க உயிரைத்தாண்டித்தான் அவரைத் தொட முடியும் என்று கூறினார்.