Asianet News TamilAsianet News Tamil

மெரீனா கருணாநிதிக்கு நாங்க போட்ட பிச்சை!! அமைச்சரின் அதிரடி பேச்சு

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வழங்க மறுத்து காந்தி மண்டபத்தில் அரசு இடம் ஒதுக்கியது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்ற நிலையில் திமுகவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் வழங்குவதற்கு எதிராக நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யாமல், தாங்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டோம்.  அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது அதிமுக போட்ட பிச்சை எனப் பேசினார்.  ஐந்து முறை முதல்வர், திராவிடக் கட்சியின் 50 ஆண்டுகால தலைவர் என்கிற மரியாதை துளி கூட இல்லாமல் அமைச்சர்  இப்படி கொச்சை படுத்தும் விதமாக பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video Top Stories