Asianet News TamilAsianet News Tamil

அதிமுக MLA பேசிக்கொண்டிருக்கும் போதே மைக்கை ஆப் செய்த ஆளுநர்!! மேடையிலேயே நடந்த பயங்கர சண்டை வீடியோ!!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் வெளியே போக சொன்ன ( go out) கவர்னர் கிரண்பேடி பேச விடாமல் மைக் இணைப்பை துண்டித்து அவமானப்படுத்தியதாக கிரண்பேடி மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
 

புதுச்சேரியில் நடந்த அரசு விழாவில், அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகனுக்கும், துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே கடும்  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. புதுவை கம்பன் கலையரங்கத்தில், அரசு விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் என பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் மேடையில் பேசும்போது, புதுச்சேரி அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறினார். கழிப்பிடம் இல்லாத மாநிலமாக அறிவிக்கும் முன்பு, பல்வேறு இடங்களில் கழிப்பிட வசதி இல்லை என்றார். அதற்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கையெடுத்து கும்பிட்டு, இருக்கையில் அமரும்படி கூறினார். இல்லை என்றால் விழா நடத்துவதற்கு உதவியாக, மேடையை விட்டு இறங்குங்கள் என்று கூறினார். 

இதனால் கடும் கோபமடைந்து எம்.எல்.ஏ.அன்பழகன் யூ கோ என்று ஆங்கிலத்தில், ஆளுநரைப்  பார்த்து கூறினார். ஆனால், எம்.எல்.ஏ. அன்பழகன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது மைக் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அன்பழகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேடையிலேயே துணை நிலை ஆளுநர் கிரண்பேடியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Video Top Stories