Asianet News TamilAsianet News Tamil

குலை நடுங்க வைக்கும் பயங்கர வீடியோ!! சீறும் பாம்பிடம் இருந்து குட்டிகளை காப்பாற்றிட போராடிய நாய்!

பொதுவாகவே தாய்மை உணர்வு என்பது மனிதர்களை போலவே மிருகங்களிடமும் அதிகம் உண்டு. தன் குட்டிக்கு ஒரு ஆபத்து என வந்துவிட்டால் காப்பாற்றிட எதையும், செய்ய துணிந்துவிடுவது தாயின் சிறப்பு. சமீபகாலமாக வரக்கூடிய செய்திகள் பல தாய்மையை கேள்வி செய்திடும் நிலைக்கு சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. 

பொதுவாகவே தாய்மை உணர்வு என்பது மனிதர்களை போலவே மிருகங்களிடமும் அதிகம் உண்டு. தன் குட்டிக்கு ஒரு ஆபத்து என வந்துவிட்டால் காப்பாற்றிட எதையும், செய்ய துணிந்துவிடுவது தாயின் சிறப்பு. சமீபகாலமாக வரக்கூடிய செய்திகள் பல தாய்மையை கேள்வி செய்திடும் நிலைக்கு சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. 

ஆனாலும் மிருகங்களின் மத்தியில் உள்ள இந்த தாய்மை உணர்வு என்றும் புனிதமானதாகவே இருக்கிறது.
இதனை நிரூபிக்கும்படியான ஒரு சம்பவம் தான் ஒடிசா மாநிலத்தில் உள்ள பத்ரக் எனும் பகுதியில் நிகழ்ந்திருக்கிறது. நள்ளிரவு நேரத்தில் நாயின் குரைக்கும் சத்தத்தையும், சீறும் பாம்பின் சத்தத்தினையும் கேட்டு அப்பகுதி விரைந்து சென்றிருக்கின்றனர் அப்பகுதி மக்கள் . 

அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை மெய்சிலிர்க்க செய்திருக்கிறது. புதிதாக பிரசவித்திருந்த நாய் ஒன்று தனது 7 குட்டிகளுடனும் தங்கி இருந்த அந்த பகுதியில், ஒரு பாம்பு படமெடுத்து ஆடிக்கொண்டிருந்திருக்கிறது. மேலும் அந்த பாம்பு ஏற்கனவே 2 நாய்குட்டிகளை கடித்திருந்த நிலையில், மீதமுள்ள குட்டிகளை காப்பாற்றிட கடுமையாக சத்தம் போட்டிறுக்கிறது அம்மா நாய். கடைசியில் இந்த போராட்டத்தின் இடையே 4 நாய்குட்டிகளை பாம்பு கடித்திருக்கிறது. 

அதில் ஒரே ஒரு நாய்க்குட்டி தான் காப்பாற்றப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தை பார்த்த மக்கள், பாம்பு மிகவும் ஆக்ரோஷமாக சீறிக்கொண்டிருந்தது. அதனால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. பின்னர் தான் இரும்பு கம்பி ஒன்றின் உதவியால் அந்த பாம்பினை அப்புறப்படுத்தினோம். ஆனாலும் குட்டிகளை காத்திட அம்மா நாய் போராடியதும் தவித்ததும் எங்களை கலங்கடித்துவிட்டது என அப்பகுதியினர் தெரிவித்திருக்கின்றனர்.

Video Top Stories