
பஹல்காம் பயங்கரவாதிகளை எதிர்த்து போராடிய நிஜ ஹீரோ சையத் அடில் ஹூசேன் ஷா!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில், சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கர்நாடகா, ஐதராபாத் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன.முழுக்க முழுக்க ஹிந்து மக்களை குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பஹல்காமில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும் குதிரை சவாரி தொழில் செய்து வரும் உள்ளூர்வாசியான சையத் அடில் ஹூசேன் ஷா என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.