
காஷ்மீருக்குச் செல்லும் முதல் வந்தே பாரத் ரயில்! பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்கிறார் !
இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கும் வகையில், ஏப்ரல் 19ஆம் தேதி காஷ்மீருக்கு முதல் முறையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து ரயில் பயணத்தைத் தொடங்கி வைக்க உள்ளார் . ஜம்மு ரயில் நிலையம் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருவதால், ரயில் கத்ராவிலிருந்து புறப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.