
எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் ரேஞ்சர்.. சத்தமின்றி இந்திய ராணுவம் செய்த தரமான சம்பவம்.!
ஜெயப்பூர்: இந்தியா பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ரேஞ்சர் ஒருவரை எல்லைப் பாதுகாப்புப் படை அதிரடியாகக் கைது செய்துள்ளது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உளவு பார்க்கும் முயற்சியாக அந்த பாகிஸ்தான் ரேஞ்சர் இந்தியாவில் ஊடுருவ முயன்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.