
இந்தியா தாக்குதல்? வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசம் கைப்பற்ற வேண்டுமா?
பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியா எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் என்ற சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசம் கைப்பற்ற வேண்டும் என்று வங்கதேச ராணுவத்தின் முன்னாள் தலைவர் ஃபஸ்லுர் ரஹ்மான் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.