Asianet News TamilAsianet News Tamil

மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர்: வீடியோ வைரல்

சுருக்கு மடி வலையை பயன்படுத்துவதை எதிர்த்த மீன் வளத்துறை அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுக்கும் திமுக பிரமுகரின் வீடியோ வைரலானதால் பரபரப்பு.
 

திருநெல்வேலி மாவட்டம் உவரி மீனவ கிராமத்தில்  300க்கு மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதில் இருவதிற்கும் மேற்பட்ட மீனவர்கள் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலை மூலம் மீன் பிடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சுருக்குமடி வலை பயன்படுத்திய மீனவர்களிடம்  பேச்சு வார்த்தை நடத்த சென்ற மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன் குமார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அப்பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரும் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான அந்தோணிராய் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அதோடு அதிகாரிகளை தரக்குறைவாக தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். காவல்துறையினர் முன்பே இச்சம்பவம் நடைபெறுகிறது. அப்பகுதியில் இருந்த நபர் ஒருவர் இதனை செல்போனில் படம் பிடித்த நிலையில் தற்போது இது வைரலாகி இருக்கிறது. 

Video Top Stories