பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் மீது சசிகலா புஷ்பா கணவர் புகார்
சசிகலா புஷ்பாவிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பொன்பால கணபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11 ஆம் தேதி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று சசிகலா புஷ்பாவிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பொன்பால கணபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி ஆன்லைன் மூலம் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.