
Tirumala Thirupathi
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருடன், திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வழிபட்டார். திருமலை திருப்பதி கோயில் நிர்வாகம், அர்ச்சகர்கள் சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. சாமி தரிசனத்துக்குப் பின்னர் அவர்களுக்கு புனித தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. திருமலையில் உள்ள அன்னபிரசாத மையத்தில் பக்தர்களுக்கு சந்திரபாபு நாயுடு காலை உணவை வழங்கினார்.