Asianet News TamilAsianet News Tamil

Viral Video : கார் மோதி தூக்கிவீசப்பட்ட இருவர்! பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக நின்று பேசிக் கொண்டிருந்த இருவர் மீது மோதி விபத்துக்குள்ளான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
 

ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஜம்பை பகுதியில் உள்ள ஒரு டீக்கடை வாசலில் நின்றுகொண்டிருந்த சக்திவேல் மற்றும் நந்தகோபால் ஆகிய இருவரும் தங்களது இருசக்கர வாகனம் மீது அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஆப்பக்கூடல் பகுதியில் இருந்து பவானி நோக்கி அதிவேகமாக வந்த கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக நின்று பேசிக் கொண்டிருந்த இவர்கள் இருவர் மீதும் வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீது ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
 

Video Top Stories