Asianet News TamilAsianet News Tamil

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவைப் புறக்கணிக்கும் தமிழக மீனவர்கள்

இலங்கை இந்தியா இருநாட்டு மீனவர்களும் கலந்துகொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை தமிழக மீனவர்கள் புறக்கணிக்க உள்ளனர்.

இலங்கை இந்தியா இருநாட்டு மீனவர்களும் கலந்துகொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை தமிழக மீனவர்கள் புறக்கணிக்க உள்ளனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் எதிரொலி இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவில் தமிழக மீனவர்கள் கலந்துகொள்ளப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து கூறியிருக்கும் வேர்க்கோடு பங்குத்தந்தை கூறுகையில், வெளிமாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு படகுகளில் செல்ல பதிவு செய்த நபர்கள் வீண் அலட்சியலை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். விசைப்படகிற்காகச் செலுத்திய பணம் விரைவில் திருப்பித் தரப்படும் எனவும் வேர்க்காடு பங்குத்தந்தை உறுதி அளித்துள்ளார்.

Video Top Stories