Asianet News TamilAsianet News Tamil

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு; கோவை சிபிசிஐடி அதிகாரிகள் முன் சயான் ஆஜர்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்காக சயான் இன்று சிபிசிஐடி அதிகாரிகள் முன் நேரில் ஆஜரானார்.

First Published Feb 1, 2024, 6:05 PM IST | Last Updated Feb 1, 2024, 6:05 PM IST

2017ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மை காலமாக இவ்விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய நபராகக் கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த சயானிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் சம்மன் அனுப்பிய நிலையில் இன்று காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு சயான் இன்று ஆஜரானார்.

Video Top Stories