Asianet News TamilAsianet News Tamil

பைக்கில் இருந்து வந்த புஷ் புஷ் சத்தம்; என்னவென்று பார்த்த உரிமையாளருக்கு ஷாக் கொடுத்த பாம்பு

ஆம்பூர் பஜார் பகுதியில் ஜவுளி கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் 5 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியை சேர்ந்தவர் ரகுராம். பஜார் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரகுராம் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தனது கடைக்கு முன்பு அவருடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே துணி வியாபாரம்  செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்திற்குள் நுழைந்த விஷப்பாம்பு ஒன்றினை அறிந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். 

தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த ஆம்பூர் தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரமாக போராடி இருசக்கர வாகனத்திற்குள் நுழைந்த சுமார் 5 அடி நீலமுள்ள கொம்பேறி மூக்கன் கொடிய விஷபாம்பினை லாவகமாக பிடித்து ஒரு பாட்டிலில் அடைத்து எடுத்து சென்று காப்புகாட்டில் விட்டனர்.

Video Top Stories