Asianet News TamilAsianet News Tamil

நெல்லையில் பர்தா அணிந்து செயின் பறிப்பு; கையும் களவுமாக சிக்கிய வடமாநில பெண்களால் பரபரப்பு

திருநெல்வேலி மாவட்டம் பாளை மார்கெட் அருகே பேருந்தில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில பெண்கள் இருவரை கையும் களவுமாக பிடித்த சக பயணிகள் அவர்களை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே ஒரு பேருந்தில் பர்தா அணிந்த மூன்று வட மாநில பெண்கள் ஒரு வயதான பெண்மணியிடம் கழுத்தில் கிடந்த செயினை பறித்துள்ளனர். இதனைப் பார்த்த சக பயணி ஒருவர் உடனடியாக மூன்று பேரையும் பிடிக்க முற்பட்டபோது ஒரு பெண் தப்பி ஓடி விட்டார். மற்ற இருவரையும் கையும், களவுமாக பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். செயின் பறிப்பு குறித்து காவல் துறையினர் பெண்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Video Top Stories