Asianet News TamilAsianet News Tamil

VIDEO | வாகன ஓட்டிகள் கவனம்! - நெடுஞ்சாலையோரம் உலா வரும் ஒற்றை காட்டு யானை!

குன்னூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் ஒற்றை காட்டு யானை உலா வருவதால், வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
 

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பலாப்பழ சீசன் துவங்கியுள்ளதால் உணவு தேடி ஒற்றைக் காட்டி யானை உலா வருகிறது.

குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி பார்க் அருகே 13 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் கடந்த ஒரு வார காலமாக சாலையோரமாக ஒற்றை காட்டு யானை வருவதும் இரவு வேலைகளில் சாலையில் வந்து நிற்பதால் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.

வனத்துறையினர் காட்டு யானை சாலைக்கு வராமல் கண்காணித்து வருகின்றனர் இரவு வேளையில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Video Top Stories