Asianet News TamilAsianet News Tamil

தேமுதிகவின் பலத்தை ஈரோடு இடைத்தேர்தல் மூலம் தெரிந்து கொள்ளலாம் - பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவின் பலம் குறையவில்லை என்பதை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்று அக்கட்சியின் பொருளாளா பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 

தேமுதிக நிர்வாகியின் இல்ல திருமண விழா திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த், ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் பொதுமக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். எனவே, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார். அவரை பார்க்கும் போது விஜயகாந்தை பார்ப்பது போல் மக்கள் எண்ணுகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார்.

ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் எனவே தேமுதிகவின் பலம் குறையவில்லை என்பதை இந்த ஈரோடு இடைத்தேர்தல் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளலாம். இடைத்தேர்தல் என்பது ஜனநாயகமா அல்லது பணநாயகமா  அது எப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. எழுதாத பேனாவுக்கு நினைவு சின்னம் வைப்பது என்பது தேவையில்லாதது -  அதுவும் கடலில் வைப்பது என்பது தேவையில்லாதது.

ஏற்கனவே விஜயகாந்த் அவர்கள் அவரை பாராட்டி தங்கப் பேனாவை கொடுத்திருக்கிறார். எங்களது கட்சியை யாரும் பின் நின்று  இயக்கவில்லை - தேமுதிக தலைவர் விஜயகாந்த் மட்டுமே இயக்குகின்றார். மக்களது வரிப்பணத்தை கொண்டு பல திட்டங்கள் நிறைவேற்றப்பட  உள்ளாமல் நிலையில் இது போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

 

Video Top Stories