Asianet News TamilAsianet News Tamil

Watch : கோவையில் திடீர் குளு குளு கோடை மழை! - மக்கள் மகிழ்ச்சி!

கோவை மாநகர பகுதிகளான காந்திபுரம், பாப்பனாயக்கன்பாளையம், பீளமேடு, உப்பிலிபாளையம், சுங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் கன மழை பெய்தது.
 

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக கோவையில் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் லேசான காற்றுடன் பெய்த திடீர் கனமழையால் வேப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.

அதே வேளையில் கனமழை காரணமாக காந்திபுரம், பாப்பனாயக்கன்பாளையம், பீளமேடு, உப்பிலிபாளையம், சுங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி ஆளாகியுள்ளனர்.

Video Top Stories