Asianet News TamilAsianet News Tamil

கோயம்புத்தூர் டாஸ்மாக் பாரில் குடிபோதையில் ரகளை; இளைஞர்கள் இருவர் கைது!!

டாஸ்மாக் பாரில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 2 மதுப்பிரியர்கள் கைது செய்யப்பட்டனர். காலி பாட்டில்களை பார் ஊழியர்கள் மீது வீசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை அறிவொளி நகர் பகுதியில் டாஸ்மாக் கடையுடனான பார் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பாரில் நேற்று மதுப்பிரியர்கள் இருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுப்பட்டனர். இதையடுத்து, ரகளையில் ஈடுப்பட்ட அஜித் மற்றும் தினேஷ்குமார் கைது செய்யப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில்  குடிபோதையில் மேசை மீது கால் போட்டதால் பார் உரிமையாளர்களுக்கும், மதுப்பிரியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
 
மதுப்பிரியர்கள் பாரில் இருந்த சேர், டேபிள்களை தரையில் தூக்கிப் போட்டு உடைத்துள்ளனர். மேலும் காலி பாட்டில்களை பார் ஊழியர்கள் மீது தூக்கி வீசு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள இருக்கும் குனியமுத்தூர் போலீசார் ஆபாச செயலில் ஈடுபடுதல், காயம் ஏற்படுத்தல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு மதுப்பிரியர்களை சிறையில்  அடைத்தனர்.