Asianet News TamilAsianet News Tamil

விஜயகாந்த் போன்ற குணம் படைத்த அரசியல் தலைவரை பார்க்க முடியாது - நிர்மலா சீதாராமன் புகழாரம்

சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் தொண்டர்களின் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் உடலுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “மக்களுக்காக விஜயகாந்த் பாடுபட்டது, பசியோடு வருபவர்களுக்கு சாப்பாடு போட்டு அனுப்பியது போன்ற விஷயங்களை நாம் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. 

அவரது மனம் மிகவும் இளகியது. பிறரது கஷ்டத்தை பார்க்க முடியாத மனம். தனக்கு கிடைப்பதே பிறக்கும் கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்தவர். விஜயகாந்த் போன்ற குணம் படைத்த அரசியல் தலைவரை பார்க்க முடியாது” என நெகிழ்ச்சிபட தெரிவித்துள்ளார்.

Video Top Stories