Asianet News TamilAsianet News Tamil

வீரத்தை போற்றும் வகையில் விருது.. கௌரவித்த முதல்வர்!!

அதீத திணிச்சலுக்கான  முதல்வரின் சிறப்பு விருது நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கொள்ளையர்களை அடித்து ஓட ஓட விரட்டிய வயதான தம்பதிகளான சண்முகவேல் - செந்தாமரை ஆகியோருக்கு வழங்கப்பட்டது . 

நேற்று 73 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டது . சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடியை முதல்வர் பழனிசாமி ஏற்றிவைத்து சுதந்திர தின உரையாற்றினார் .அதன் பின்னர் இந்த வருடத்திற்கான சுதந்திர தின விருதுகள் வழங்கப்பட்டன . அதில் அதீத திணிச்சலுக்கான  முதல்வரின் சிறப்பு விருது நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கொள்ளையர்களை அடித்து ஓட ஓட விரட்டிய வயதான தம்பதிகளான சண்முகவேல் - செந்தாமரை ஆகியோருக்கு வழங்கப்பட்டது . இருவரும் முதல்வர் கரங்களால் பதக்கமும் , இரண்டு லட்சத்திற்கான காசோலையையும், சான்றிதழும்  பெற்றுக்கொண்டனர் . இதற்காக அவர்கள் இருவரையும் அம்பாசமுத்திரம் தாசில்தார் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி விமானத்தில் சென்னை அழைத்து வந்தார் .முதல்வர் கரங்களால் சிறப்பு விருது பெற்ற தம்பிதயாராகள் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...

அதைப்போல் டெல்லியில் வீர் சக்ர  விருது , விங் கமாண்டர் அபிநந்தனுக்கு பிரதமர் மோடி வழங்கினார் என்பது குறிப்படத்தக்கது

Video Top Stories