Asianet News TamilAsianet News Tamil

Watch : 20 மாத திமுக ஆட்சியில், திமுக குடும்பத்திற்கே விடியல் ஏற்பட்டுள்ளது - ஜெயக்குமார் விளாசல்!

சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு எதிர்க்கட்சி போல் திமுக திமுக செயல்படுகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், வரும் 2024 தேர்தலில் அதிமுக செய்த திட்டங்களையும், திமுக அரசின் மக்கள் விரோத போக்கினையும் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிப்போம் என்றார்.

20 மாத ஆட்சியில் திமுக குடும்பத்துக்கு தான் விடியல் ஏற்பட்டிருக்கிறது என்றும், .சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு எதிர்க்கட்சி போல் திமுக செயல்படுவதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Video Top Stories