Asianet News TamilAsianet News Tamil

கலைஞர் சிலை திறப்பு முதல் பொதுக்கூட்டம் வரை பலே ஏற்பாடு..! வீடியோ

மறைந்த திமுக தலைவர், கருணாநிதியின் முதலாம் ஆண்டு  நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது இதை முன்னிட்டு இன்று கலைஞர் சிலை திறப்பு முதல் பொதுக்கூட்டம் வரை நடக்கிறது

மறைந்த திமுக தலைவர், கருணாநிதியின் முதலாம் ஆண்டு  நினைவு அஞ்சலி இன்று, அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று காலை 8 மணியளவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகிலிருந்து, கருணாநிதி நினைவிடம் நோக்கி மாபெரும் அமைதி பேரணி நடக்கிறது.

இந்த நிகழ்விற்கு  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.  நாளை மாலை 5 மணியளவில், மு.க.ஸ்டாலின், "முரசொலி" அலுவலக வளாகத்தில், "அமர்ந்த நிலையில் எழுத்தோவியம் தீட்டுவது போன்ற எழுச்சித் தோற்றத்தில்" நிறுவியுள்ள கருணாநிதியின் உருவச் சிலை திறப்பு விழா நடக்கிறது. விழாவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சிலையை திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து, மாலை 5.30 மணியளவில் சென்னை ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழாவும் மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது. விழாவுக்கு திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தலைமை வகிக்கிறார். முரசொலி ஆசிரியர் செல்வம் வரவேற்கிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

விழா நிறைவாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றியுரையாற்றுகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்றைய தினம்   பேரணியில் கலந்துகொள்ள வேண்டும்" என்று தனது கட்சி தொண்டரகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 

Video Top Stories