Asianet News TamilAsianet News Tamil

வரிசையில் நின்று வாக்கு செலுத்திய அதிமுக வேட்பாளர் தென்னரசு

ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் ஆர்வமுடன் வாக்கு செலுத்தி வரும் நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசு தனது வாக்கினை பதிவு செய்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்கப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளர்கள் பொதுமக்களுடன் இணைந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அந்த வகையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தனது வாக்குகளை பதிவு செய்துவிட்டு செய்தியாளர்களிடம் கூறுகையில், தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிமுக வேட்பாளர் தென்னரசு நான் 100 சதவீதம் வெற்றி பெறுவேன். அதவும் 25 ஆயிரம் வாக்குகள் வித்தயாசத்தில் வெற்றி பெறுவேன் என்று தெரிவித்துள்ளார்.

Video Top Stories