Asianet News TamilAsianet News Tamil

பாரத் ஜோடா யாத்திரை! ராஜஸ்தானில் பாரம்பரிய ஆட்டத்தில் கலந்துகொண்ட ராகுல்காந்தி!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரை, ராஜஸ்தான் மாநிலம் வந்தடைந்தது. ஜலாவார் மாவட்டத்திலிருந்து இன்று காலை ராகுல் காந்தி யாத்திரையைத் தொடங்கினார்
 

ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரை கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி தொடங்கியது. இதுவரை தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசத்தை முடித்து நேற்று காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலம் வந்து சேர்ந்தது.

ராகுல் காந்தி காலை நடைபயணத்தைத் தொடங்கியபோது, காலிதாலி பகுதியில் கடும் குளிர் நிலவியது, 13 டிகிரி செல்சியஸாக இருந்தது. ஆனாலும், ராகுல் காந்தி, பேன்ட், டிஷர்ட் அணிந்தபடியே தனது நடைபயணத்தைத் தொடங்கினார். ஆனால், ராகுல் காந்தியுடன் வந்த மற்ற தலைவர்கள் குளிருக்கு இதமாக ஜாக்கெட்டுகளை அணிந்து நடந்தனர்

Video Top Stories