Rafeal
(Search results - 13)politicsJul 29, 2020, 11:58 PM IST
ரபேல் விமானம் கொள்முதல்: 576 டூ1670 கோடி இதற்கு இடையில் இருக்கும் மர்மம் என்ன? கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி.!
பிரான்ஸ் நாட்டில் இருந்து போர் விமானம் ரபேல் 36 வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு அதன்படி முதல் கட்டமாக 5 விமானங்கள் இன்று இந்தியா வந்தடைந்திருக்கிறது. ரபேல் விமானங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அதற்கான ஆவணங்களை ராகுல்காந்தி ஏற்கனவே வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியிருந்தார். இந்தநிலையில் அந்த சர்ச்சை மீண்டும் கிளம்பியிருக்கிறது.
politicsNov 15, 2019, 7:19 AM IST
ரபேல் தீர்ப்பு... முறைகேட்டை விசாரிக்க கதவு திறந்துள்ளது.... தீர்ப்பின் அம்சங்களைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி அதிரடி!
“பாஜக தீர்ப்பை முழுவதுமாகப் பார்க்காமல் வரவேற்றுள்ளது. தீர்ப்பின் 73 மற்றும் 86-வது பத்தியில் கூறப்பட்டுள்ள அம்சங்களில், இதுகுறித்து சிபிஐயோ அல்லது வேறு எந்த விசாரணை அமைப்போ விசாரணை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதை திசை திருப்ப பாஜக முயற்சி செய்கிறது” என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
politicsOct 12, 2019, 8:18 AM IST
டயருக்கு அடியில் எலுமிச்சை வச்சதெல்லாம் இந்திய கலாச்சாரம்ப்பா…கிண்டல் பண்ணாதீங்க ! நிர்மலா சீத்தாராமன் கருத்து !!
ரபேல் விமான சக்கரத்துக்கு அடியில் எலுமிச்சை வைத்தது இந்திய கலாசாரம் என நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.
politicsOct 8, 2019, 8:36 PM IST
சந்தனம், பொட்டு வச்சு ஓம் என்று எழுதி ரபேல் விமானத்தைப் பெற்றுக் கொண்ட ராஜ்நாத் சிங் ! டயர் அடியில் எலுமிச்சை வைத்து பூஜை !!
பிரான்ஸில் இருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் விமானத்திற்கு சந்தனம், பொட்டு, டயர்களின் கீழ் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்யப்பட்டது. மேலும் ரஃபேல் விமானத்தின் மீது தேங்காய் வைத்து, முன்பகுதியில் ஓம் என்று இந்தியில் எழுதி மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்.விமானத்தைப் பெற்றுக் கொண்டார்.
indiaOct 6, 2019, 11:46 PM IST
ரஃபேல் போர் விமானத்துக்கு நாளை ‘ஆயுதபூஜை’: ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றார்
ரஃபேல் போர் விமானத்துக்கு நாளை ஆயுதபூஜை(சாஸ்த்ரா பூஜை) செய்வதற்காகவும், தசரா பண்டிகையை கொண்டாடவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார்.
politicsSep 20, 2019, 11:01 PM IST
ஒப்படைக்கப்பட்டது ரஃபேல் போர் விமானம்: பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து முதல் விமானத்தை பெற்றது இந்தியா
பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து முதலாவது ரஃபேல் போர் விமானத்தை இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் இன்று பெற்றுக்கொண்டார். அந்த விமானத்தில் ஏறக்குறைய ஒருமணி நேரம் பறந்து சோதித்தார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன
politicsMar 12, 2019, 11:29 PM IST
அனில் அம்பானியால் ஒரு பேப்பர் ஃபிளைட் கூட தயாரிக்க முடியாது !! கிழித்து தொங்கவிட்ட ராகுல் காந்தி !!
தொழிலதிபர் அனில் அம்பானியால் ரஃபேல் போர் விமானம் அல்ல, ஒரு பேப்பர் விமானத்தைக் கூட தயாரிக்க முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
politicsMar 8, 2019, 10:51 PM IST
ரஃபேல் ஒப்பந்த ஆவணங்கள் திருடப்படவில்லை !! அந்தர் பல்டி அடித்த மத்திய அரசு !!
ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஆவணங்கள் திருடப்பட்டு விட்டதாக உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்த ஆவணங்கள் திருடப்படவில்லை என அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
politicsMar 8, 2019, 8:32 AM IST
உங்க மிரட்டலுக்கொல்லாம் நாங்க பயப்படப்போவதில்லை…. ரஃபேல் ஆவண விவகாரத்தில் பாஜகவுக்கு இந்து என்.ராம் பதிலடி !!
ரஃபேல் ஊழல் தொடர்பான ஆவணங்களை எப்படிப் பெற்றோம் என்கிற விவரங்களை வெளியிட மாட்டோம் என்று தி இந்து குழுமத்தின் தலைவரான என்.ராம் கூறினார். இது தொடர்பாக மத்திய அரசின் மிட்டலுக்கு அஞசமாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
politicsJan 18, 2019, 8:28 PM IST
41 சதவீதம் கூடுதல் விலையில் ரஃபேல் போர் விமானம்… வெளியான அதிர்ச்சி தகவல் !!
விதிமுறைகளை கடைபிடிக்காமல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தாலும், இந்தியாவுக்கென்றே பிரத்யேகமாகக் கோரப்பட்ட 13 சிறப்பு வடிவமைப்பு, மேம்பாட்டு அம்சங்களாலும், காங்கிரஸ் ஆட்சியில் 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் பிரதமர் மோடியின் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒவ்வொரு ரஃபேல் விமானத்தின் விலையும் 41 சதவீதம் அதிகமாக போடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
politicsJan 8, 2019, 8:32 PM IST
ரஃபேல் விசாரணை !! மோடி சார் இனி ஓடவும் முடியாது … ஒளியவும் முடியாது… ராகுல்காந்தி கிண்டல் !!
சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்க உள்ளதால் ரஃபேல் விசாரணையில் இருந்து பிரதமர் மோடியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
politicsDec 14, 2018, 11:36 PM IST
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க ராகுல் வருவாரா ? இல்ல ஓடிப்போவாரா ? ராஜீவ் சந்திரசேகர் எம்,பி. கிண்டல் !!
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ள பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர், சில மாதங்களுக்கு முன்பு இப்பிரச்சனையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாரா என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி தற்போது விவாதத்துக்கு வருவாரா அல்லது ஓடிப்போவாரா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.
politicsOct 24, 2018, 10:48 PM IST
ரஃபேல் ஊழலை விசாரிக்க முடிவு செய்ததால்தான் அலோக் வர்மா நீக்கப்பட்டுள்ளார்… ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு …
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடைபெற்ற ஊழல் குறித்துவிசாரிக்க முடிவு செய்திருந்ததாலும், அது தொடர்பான ஆவணங்களை கேட்டதாலும் தான் சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் சர்மா நீக்கப்பட்டுள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.