பான் எண்ணை சமர்பிக்க பிப்ரவரி 28 கடைசி ..!! வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கட்டாயமாகிறது...!!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பான் எண் பயன்பாடு, இனி அனைத்து துறைகளிலும் இருக்கும். குறிப்பாக தற்போது, வங்கிகளில் கணக்கு வைத்திருபவர்கள், பான் எண்ணை கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, வங்கிகள் அனைத்தும், தங்களது வாடிக்கையாளர்களிடம் , பான் எண்ணின் அவசியம் குறித்தும், இதுவரை பான் எண் பெறாதவர்கள் உடனடியாக பான் எண்ணை பெறுவதற்கு வழிநடத்தவும் , வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

பான் எண் இல்லாதவரக்ள் செய்ய வேண்டியது :

படிவம் 60 ஐ பூர்த்தி செய்து, தங்களின் வங்கிக் கிளைகளில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பு பணத்தை தடுக்கப்படும் :

வங்கிச் சேமிப்புக் கணக்குகளைப் பயன்படுத்தி, கருப்புப் பணப் பரிமாற்றம் செய்யப்படுவதைத் தவிர்க்க , பான் எண் கட்டாயம் தேவை என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.