Asianet News TamilAsianet News Tamil

பயந்து போய் அவசர அவசரமாக 10,000 கோடி ரூபாயை செலுத்திய ஏர்டெல் நிறுவனம்..!

இந்தியாவில் உள்ள சிம்கார்டு நிறுவனங்களான ஏர்டெல், வோடாஃபோன் உள்ளிட்டவை அலைக்கற்றை அங்கீகாரம் மற்றும் அலைக்கற்றை பயன்பாடு உள்ளிட்டவற்றிற்காக அரசுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், இவ்வாறு செலுத்த வேண்டிய தொகையை ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா உள்ளிட்ட 15 நிறுவனங்கள் செலுத்தவில்லை.

Bharti Airtel Pays Rs 10,000 Crore To Government
Author
Delhi, First Published Feb 17, 2020, 3:14 PM IST

உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கையை அடுத்து, மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 10,000 கோடி ரூபாயை ஏர்டெல் நிறுவனம் செலுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள சிம்கார்டு நிறுவனங்களான ஏர்டெல், வோடாஃபோன் உள்ளிட்டவை அலைக்கற்றை அங்கீகாரம் மற்றும் அலைக்கற்றை பயன்பாடு உள்ளிட்டவற்றிற்காக அரசுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், இவ்வாறு செலுத்த வேண்டிய தொகையை ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா உள்ளிட்ட 15 நிறுவனங்கள் செலுத்தவில்லை.

Bharti Airtel Pays Rs 10,000 Crore To Government

இதனையடுத்து ஏர்டெல், வோடாஃபோன் உள்ளிட்ட 15 செல்போன் சேவை நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடியை ஜனவரி 23-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என கடந்தாண்டு அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கெடு தேதி முடிந்தும், அத்தொகை செலுத்தப்படாத நிலையில் கூடுதல் அவகாசம் கேட்டு செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க;-   முதியவர் இறந்ததாக வதந்தியை பரப்பி ஆதாயம் தேடாதீங்க... முதல்வர் எடப்பாடி எச்சரிக்கை..!

Bharti Airtel Pays Rs 10,000 Crore To Government

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஏர்டெல், வோடாபோன் உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், நிலுவைத் தொகையைச் செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய மத்திய தொலைத்தொடர்புத் துறை அதிகாரிக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கடும் கண்டனத்தை தெரிவித்து வழக்கு விசாரணையை மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Bharti Airtel Pays Rs 10,000 Crore To Government

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து, மத்திய தொலைத்தொடர்புத் துறை சனிக்கிழமை இரவுக்குள் செலுத்தக் கோரி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியது. இதையடுத்து, எர்டெல் நிறுவனம் தான் செலுத்த வேண்டிய ஏறக்குறைய ரூ.35 ஆயிரம் கோடியில் முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடியை இன்று தொலைத்தொடர்புத் துறையிடம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10,000 கோடி ரூபாய் போக, 25,586 கோடி ஏர்டெல் நிறுவனத்திற்கு இன்னும் பாக்கித் தொகை உள்ளது. எனினும் வோடாஃபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் அரசுக்கு தொகையை செலுத்துவது குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios