இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…. வாகன ஓட்டிகள் தலையில் இடி
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்து வாகன ஓட்டிகள் தலையில் இடியாய் இறங்கி உள்ளது.
சென்னை: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்து வாகன ஓட்டிகள் தலையில் இடியாய் இறங்கி உள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையானது, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்துக்கும் ஏற்ப நிர்ணயம் செய்யப்படும். நாள்தோறும் அதன் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து அறிவிப்பு வெளியிடும்.
அதன்படி இன்று வெளியிட்ட விலை நிலவரம் வாகன ஓட்டிகளின் தலையில் இடியை இறக்கி உள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 30 காசுகள் உயர்ந்து ரூ.102.70 காசுகளாக விற்கப்படுகிறது.
டீசல் 33 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ98.59 ஆக இருக்கிறது. அக்டோபர் மாதத்தில் பெட்ரோல், டீசல் 15வது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது. தொடரும் இந்த விலை ஏற்றத்தால் விலைவாசி மேலும் உயரும் அபாயம் எழுந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.